Monday, December 5, 2011

அப்பன் என்றும் அம்மை என்றும்

 இந்த பாடலை நாம் எப்பொழுது கேட்டாலும்   நமது உண்மை நிலையை எடுத்து கூறும்.

படம் : குணா

பாடியவர் : இளையராஜா
இசை அமைத்தவர் : இளையராஜா

பல்லவி 

ஓ…………ஓ…ஓ…ஓ…
அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,(1)
அது புத்தன் என்றும் சித்தன் என்றும்
பித்தன் என்றும் ஆவெதென்ன
சக்கையாக போகும் கரும்பு
ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு(2)

 அனு பல்லவி
பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு...

சரணம் 1
குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா
சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா
சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்
இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு..(அப்பன் என்றும் அம்மை என்றும் (1))

சரணம் 2
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா
தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு
கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு
மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்..(அப்பன் என்றும் அம்மை என்றும் (2))

No comments:

Post a Comment