Tuesday, December 6, 2011

பிராயச்சித்தம் செய்வோமே!



* அன்பை வெறும் பேச்சாக இல்லாமல், செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.

* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது.

* மந்திரங்களை நாம் கூறாமல் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. வழிபாட்டு நேரங்களில் மந்திரங்களை உச்சரிப்பது நல்லது.

* உள்ளத்தால், மனதால் பிறருக்கு உதவி செய்வதை விட உடலால் மற்றவர்களுக்கு உதவி செய்வது வாழ்க்கையில் கிடைக்கும் பெரிய புண்ணியம்.

* உடல், வாய், மனம், பணம் என்ற நான்கு வகைகளிலும், பாவம் செய்கிறோம், இதற்கு பிராயச்சித்தமாக உடலால் உதவியும், வாயால் பகவான் நாமமும், மனதால் தியானமும், பணத்தால் தர்மமும் செய்ய வேண்டும்.

* கஷ்டம், பயம், காமம், குரோதம் போன்றவை நம்மை கட்டிப்போடுகின்றன. இதுவே குடும்ப பந்தமாகும். இந்த பந்தத்திலிருந்து விடுபட்ட நிலையே மோட்சம் அல்லது முக்தியாகும்.

- காஞ்சிப்பெரியவர் 

No comments:

Post a Comment